நோர்வூட்டில் உயிருடன் சிறுத்தை மீட்பு…!!
Read Time:1 Minute, 11 Second
வலையில் சிக்குண்ட நிலையில் இருந்த சிறுத்தை ஒன்றை வன விலங்கு அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நோர்வூட் – வெஞ்சர் தோட்டத்தில் 28.04.2016 அன்று காலை சிறுத்தை ஒன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
5 அடி நீளமும் 3 உயரமும் கொண்ட மேற்படி சிறுத்தையானது இனம் தெரியாதோரால் மிருகம் வேட்டையாடுவதற்காக வைக்கப்பட்டிருந்த வலையில் சிக்குண்ட நிலையில், பிரதேச மக்கள் கண்டு நோர்வூட் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
மேலும், வலையில் சிக்குண்ட நிலையில் இருந்த மேற்படி சிறுத்தை உயிருடன் நல்லதண்ணி வன விலங்கு பாதுகாப்பு அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.
Average Rating