பிரித்தானியாவில் புதிதாக உதயமாகும் ‘நிர்வாண உணவகம்…!!
பிரித்தானிய நாட்டில் புதிதாக திறக்கவுள்ள ‘நிர்வாண உணவகத்தில்’சாப்பிடுவதற்கு அந்நாட்டு வாடிக்கையாளர்கள் மத்தியில் கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளதாக செய்திகள்வெளியாகியுள்ளன.
நவீன தொழில்நுட்பத்தின் அபாரமான வளர்ச்சியினால், பொதுமக்களின்அன்றாட வாழ்க்கையும் வெகுவாக மாறியுள்ளது.
நவீன கண்டுபிடிப்புகளின் உதவி இல்லாமல் நாட்களை கடத்துவது என்பது தற்போதைய காலக்கட்டத்தில்இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
ஆனால், இந்த சூழலை உடைத்தெரிந்து எந்தவிதஅறிவியல் கண்டுபிடிப்புகளும் பயன்படுத்தாமல் முழுக்க முழுக்க இயற்கை பொருட்களை பயன்படுத்தி புதிதாக ‘நிர்வாண உணவகம்’ ஒன்று லண்டன் நகரில் திறக்கப்பட உள்ளது.
சரி, ஆனால் அதென்ன நிர்வாண உணவகம்?
இந்த ஹொட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்கள் செல்போன்கள், கமெரா உள்ளிட்ட நவீன கண்டுப்பிடிப்பு சாதனங்களை கொண்டு வரக்கூடாது.
இங்கே வாடிக்கையாளர்கள் அமர்வதற்கு கூட மரத்தால் ஆனகட்டைகளை மட்டுமே பயன்படுத்தியுள்ளனர். உள்ளே நுழைந்தவுடன், ஹொட்டலில் விளக்குகள் கூட அணைக்கப்படும்.
மேலும், உச்சபட்சமாக இந்த ஹொட்டலுக்கு வருகைதரும் வாடிக்கையாளர்கள் ஆடைகளை நீக்கி விட்டு நிர்வாணமாக அமர்ந்து உணவருந்தலாம் என்பது தான் இந்தஹொட்டலின் ’ஹைலைட்’.
இந்த விதிமுறை என்பது கட்டாயம் அல்ல. வாடிக்கையாளர்கள் விரும்பினால் நிர்வாணமாக அமர்ந்து சாப்பிடலாம்.
எதிர்வரும் யூன் மாதம் திறக்கவுள்ள Bunyadi என்றஅந்த புதிய ஹொட்டலின் நிர்வாகிகள் பேசியபோது, ‘நவீன காலத்தை மறந்து இயற்கையான சூழலில் பழங்காலத்தில் மனிதர்கள் எப்படி உணவருந்தினர் என்பதை மீண்டும் கொண்டு வருவதற்காகதான் இப்படி ஒரு திட்டத்தில் ஹொட்டலை திறக்க உள்ளதாக கூறியுள்ளனர்.
யூன் மாதம் முதல் அடுத்த3 மாதங்களுக்கு மட்டும் திறந்திருக்கும் இந்த ஹொட்டலுக்கு தற்போது புதிய சிக்கல்ஒன்று ஏற்பட்டுள்ளது.
இந்த ஹொட்டலில் சுமார் 3,000 பேர் மட்டுமே அமர்ந்து சாப்பிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆனால், தற்போது வரை 28,984 ஆண்கள் மற்றும் பெண்கள் இந்த உணவகத்தில் உணவருந்த விரும்புவதாக பதிவு செய்துள்ளனர்.
இத்தனை வாடிக்கையாளர்களை ஹொட்டல் நிர்வாகம் எப்படி எதிர்க்கொள்ளப்போகிறது என்பதை யூன் மாதத்தில் தெரிந்துக்கொள்ளலாம்.
Average Rating