மூன்று வீடுகளில் களவு! கைவரிசையை காட்டிய பெண் கைது..!!
நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மூன்று வீடுகளில் ஆடைகள் உட்பட பல பொருட்களை களவாடிய பெண் ஒருவரை பொலிஸார் நேற்று மாலை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் ரதல்ல தோட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இத்தோட்டத்தை சேர்ந்த குறித்த பெண் தொடர்ந்தும் இவ்வாறான களவாடும் சம்பவங்களில் ஈடுப்பட்டு வந்ததாக பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
தொடர்ந்து இவ்வாறு களவாடிய மேற்படி பெண் நேற்று மாலையும் மேற்படி தோட்டத்தில் தொழிலாளர்களின் குடியிருப்பில் நுழைந்து தனது கைவரிசையை காட்டியுள்ளார்.
இதனை அறிந்த பொதுமக்கள் உடனே நானுஓயா பொலிஸாருக்கு தகவலை வழங்கியதையடுத்து, ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் இப்பெண்ணை சந்தேகத்தின் பேரில் கைது செய்து பொலிஸ் விசாரணைக்குட்படுத்தியுள்ளனர்.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட குறித்த பெண்ணை இன்று நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக நானுஓயா பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
Average Rating