அம்பாறை வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது..!!

Read Time:1 Minute, 45 Second

downloadமருதமுனைப் பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை (30) இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என கல்முனை பொலிசார் தெரிவித்தனர்.

அன்றைய தினம் காலை ஆறு மணியளவில் மருதமுனை 06ஆம் பிரிவு மக்பூலியா கிராமத்தில் வீடு ஒன்றுக்குள் புகுந்த சிலர் அங்கிருந்தவர்களுடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளதுடன் அவர்கள் மீது வாள்வெட்டு நடத்தியுள்ளனர்.

இதனால் காயமடைந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவருள் நால்வர் கல்முனை ஆதார வைத்தியசாலையிலும் மற்றொருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து நேற்று மாலை அவர்களது உறவினர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களை நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

மாமா – மருமகன் ஆகியோரிடையான சொத்துப் பிரச்சினை தொடர்பில் ஏற்பட்டிருந்த முறுகல் நிலையே வாள்வெட்டு சம்பவத்திற்கு காரணம் என்று ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாகவும் பொலிசார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மான்குட்டிகளுக்கு பாலூட்டும் தாய்மார்கள்..!!
Next post 7 வயது பெண்ணிடம் மனதை பறிகொடுத்த மன்னர்! சுவாரசியமான காதல் கதை..!!