பொலிஸ் தலைமையகத்திற்கு அருகே வெடிகுண்டு தாக்குதல்! துருக்கியில் பதற்றம்..!!
துருக்கியின் தென்கிழக்கு நகரமான காஜியண்டெப்பில் உள்ள பொலிஸ் தலைமையகத்திற்கு அருகே கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இத்தாக்குலில், ஒரு பொலிசார் கொல்லப்பட்டுள்ளார். மேலும், 19 பொலிசார் உட்பட நான்கு பொதுமக்கள் காயமடைந்துள்ளனார்.
கடந்த சில ஆண்டுகளாக துருக்கியில், ஐ.எஸ்-யுடன் தொடர்புடைய குர்திஷ் போராளிகள் தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
குண்டு வெடிப்பை தொடர்ந்து அப்பகுதியில் துப்பாக்கி சண்டை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்திய குண்டுவெடிப்பிற்கு பின்னணியில் எந்த குழு உள்ளது என்பது குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
குண்டு வெடிப்பை தொடர்ந்து அந்நகரத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், கவர்னர், மேயர் அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஐ.எஸ்-யுடன் தொடர்பு இருப்பதாகச் சந்தேகிக்கப்படும் நான்கு நபர்களை, அங்காரா பகுதியில் பொலிசார் கைது செய்துள்ளனா்.
மே தின அணிவகுப்பில் தாக்குதல் நடத்த திட்டம் தீட்டி இருக்காலம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், அவா்கள் நான்கு பேரையும் கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
Average Rating