தீ வைப்பு தொடர்பாக முன்னாள் மேயர் மகன் கைது! கனடாவில் பரபரப்பு…!!
கனடாவின் அல்பெர்ட்டாவில் உள்ள CN Trestle பாலத்தில் ஏற்பட்ட தீ விபத்து உட்பட சமீபத்தில் அப்பகுதியில் நிகழ்ந்த தீ விபத்து தொடர்பாக Mayerthorpe நகர பொலிசார் ஒருவரை கைது செய்துள்ளனர்.
Mayerthorpe பகுதியை சேர்ந்த 19 வயதான லாசன் மைக்கேல் ஸ்சல்ம் என்ற நபரே குறித்த தீ வைப்பு சம்பவங்கள் தொடா்பாக கைது செய்யப்பட்டுள்ளார்.
லாசன் மைக்கேல், Mayerthorpe நகரத்தின் முன்னாள் மேயரின் மகன் என தெரியவந்துள்ளது.
லாசன் கைக்கேல், Mayerthorpe தீயணைப்பு துறையில். இளநிலை தீயணைப்பு வீரராக பணியாற்றி வந்துள்ளார். மேலும், த்ரேஸ்டல் பாலம் தீ பிடித்து எரிந்த போது, தீயணைப்பு வீரர்களுடன் இணைந்து லாசன் கை்கேலும் தீயை அணைக்க போராடியுள்ளார்.
மேலும், கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான Mayerthorpe நகரத்தின் பகுதி நேர தீயணைப்பு பணியாளர் வீரர்கள் பட்டியலில் லாசன் கை்கேல் பெயர் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது, லாசன் மைக்கேலை குறித்த செய்தியை அறிந்து, Mayerthorpe நகர தீயணைப்பு வீரர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
லாசன் தற்போது, கைது செய்யப்பட்டு காவலில் இருப்பதாகவும், எதிர்வரும் மே-4 ஆம் திகதி இந்த வழக்கு தொடர்பாக அவர் முதல் முறையாக மாகாண நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
Average Rating