வங்காளதேசத்தில் இந்து டெய்லர் துடிதுடிக்க வெட்டிக் கொலை: ஐ.எஸ். தீவிரவாதிகள் பொறுப்பேற்பு…!!

Read Time:2 Minute, 45 Second

201605011546555553_Hindu-tailor-hacked-to-death-in-Bangladesh_SECVPFவங்காளதேசத்தில் இந்து டெய்லர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு இங்குள்ள ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.

வடக்கு வங்காளதேசத்தில் உள்ள டங்கைல் மாவட்டம், கோபால்பூர் அருகேயுள்ள டுபைல் கிராமத்தில் தையற்கடை நடத்திவந்த இந்து நிகில் சந்திரா ஜோர்தார்(50) என்பவரை நேற்று (சனிக்கிழமை) தையற்கடையில் இருந்து வெளியே இழுத்து வந்த மர்மகும்பல் அவரை கொடூரமான முறையில், துடிதுடிக்க வெட்டிக் கொன்றது.

இதுதொடர்பாக சம்பவத்தை நேரில் பார்த்த அப்துல் ஜலில் என்பவரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். டெய்லர் வெட்டிக் கொலை செய்யப்பட்டு உள்ள சம்பவத்திற்கு ஐ.எஸ். தீவிரவாதம் பொறுப்பேற்றுள்ளதாக அமெரிக்காவின் கண்காணிப்பு அமைப்பான எஸ்.ஐ.டி.இ. இன்று தெரிவித்துள்ளது.

முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் தெற்காசிய நாடான வங்காளதேசத்தில் வலைத்தளங்களில் நாத்திகம் மற்றும் மதச்சார்பற்ற கட்டுரைகளை எழுதி வருகிற எழுத்தாளர்கள் கொலை செய்யப்படுவதும், பிற மததலைவர்கள் கொலை செய்யப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது. ஐ.எஸ். தீவிரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக கூறப்பட்டாலும் வங்காளதேச அரசு இந்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்து டெய்லர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், அவர் கொல்லப்பட்ட இடத்தின் அருகே ஒரு கைப்பையில் இருந்த வெடிகுண்டுகளை கண்டுபிடித்து, கைப்பற்றினர்.

இச்சம்பவம் தொடர்பாக கோபால்பூர் ஜமாத் தலைவரான பட்சா மியா, வங்காளதேசம் தேசிய கட்சியை சேர்ந்த உள்ளூர் தொண்டர் ஜந்த்தூ மியா மற்றும் கோபால்பூர் பத்திரிகையாளர்கள் சங்கத்தின் துணை தலைவர் அமினுல் இஸ்லாம் ஆகியோரை போலீசார் கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தீ வைப்பு தொடர்பாக முன்னாள் மேயர் மகன் கைது! கனடாவில் பரபரப்பு…!!
Next post சோமாலியாவில் மசூதி இடிந்து 15 பேர் பலி…!!