மஹிந்தவுக்கு போதியளவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது…!!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்கு போதியளவு விசேட அதிரடிப் படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயனாத் ஜயவீர தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்ட இராணுவப் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டு அதற்குப் பதிலாக முக்கியஸ்தர்கள் (பிரபுக்கள்) பாதுகாப்பு தொடர்பிலான விஷேட பயிற்சி பெறாத பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக, அவரது ஊடகப் பிரிவு இன்று அறிக்கை ஒன்றை வௌியிட்டிருந்தது.
இந்த நிலையில் இது குறித்து அத தெரண இராணுவப் பேச்சாளரிடம் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
மீளப் பெற்றுக்கொண்ட இராணுவப் படையினரின் எண்ணிக்கைக்கு நிகராக விசேட அதிரடிப்படையினர் மஹிந்தவின் பாதுகாப்பு கடமைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக, அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இவர்கள் முக்கியஸ்தர்களுக்கான பாதுகாப்பு தொடர்பில் விசேட பயிற்சி பெற்றவர்கள் என ஜயனாத் ஜயவீர தெரிவித்துள்ளார்.
Average Rating