எறும்பு கடித்ததால் 4 நாட்களே ஆன சிசு உயிரிழப்பு…!!

Read Time:1 Minute, 39 Second

childஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள அரசு அரச வைத்தியசாலையில் கடந்த 29ஆம் திகதி லட்சுமி என்ற பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை மூச்சுத்திணறலால் அவதிப்பட்டதால் தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று அதிகாலை, 4 நாட்களே ஆன அந்த குழந்தையின் மீது ஏராளமான எறும்புகள் மொய்த்து கொண்டிருந்தன. இதை கண்ட லட்சுமி உடனே அங்கிருந்த செவிலியர்களிடம் இதுபற்றி கூறியுள்ளார்.

எறும்புகளை செவிலியர்கள் துடைத்த போது குளுக்கோஸ் போத்தல் குழந்தை மீது விழுந்துள்ளது. இதில் குழந்தையின் கழுத்தில் காயம் ஏற்பட்டது.

அடுத்த ½ மணி நேரத்தில் அந்த குழந்தை இறந்தது. எறும்புகள் கடித்ததாலும், குளுக்கோஸ் போத்தல் வீழ்ந்ததாலும் குழந்தை இறந்ததாக உறவினர்கள் கதறி அழுதனர். இதற்கு மறுப்பு தெரிவித்த வைத்தியர்கள் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டதாலேயே குழந்தை இறந்தது என்றனர்.

இதே போல சில மாதங்களுக்கு முன்பு குண்டூர் அரச வைத்தியசாலையில் எலி கடித்து ஒரு குழந்தை இறந்தது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மனிதர்கள் வாழக்கூடிய 3 புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு…!!
Next post வயதானாலும் ஆண்மையுடன் இருக்க, ஆண்கள் செய்ய வேண்டியவை..!!