27 வயது காதலனால் கர்ப்பிணியாக்கப்பட்ட 14 வயது மாணவி…!!
பொகவந்தலாவ எல்டப்ஸ் தோட்டப் பகுதியில் 14வயது பாடசாலை மாணவி ஒருவர் கர்ப்பம் ஆகிய நிலையில் பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நேற்றய தினம் குறித்த மாணவிக்கு தலைவலி மற்றும் தலைசுற்று என்பன ஏற்பட்டு பொகவந்தலாவ வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவிற்கு வந்தபோது, குறித்த மாணவியை வைத்தியர் ஒருவர் பரிசோதித்ததன் ஊடாகவே மாணவி கர்ப்பமாகி இருப்பது தெரிய வந்துள்ளதாக பொகவந்தலாவ வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
சம்பவம் குறித்து வைத்தியசாலையின் ஊடாக பொகவந்தலாவ பொலிஸாருக்கு அறிவிக்கபட்டதை அடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் குறித்த தோட்டபகுதியை சேர்ந்த 27வயது இளைஞன் ஒருவரை இன்றையதினம் பொகவந்தலாவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த மாணவிக்கும் இளைஞனுக்கும் காதல் உறவு இருந்து வந்ததாக மாணவியினால் பொலிஸாருக்கு அளிக்கபட்ட வாக்குமூலத்தில் கூறப்பட்டுள்ளது.
கைது செய்யபட்ட சந்தேக நபர் நாளை ஹட்டன் நீதவான் முன்னிலையில் அஜர்படுத்தப்பட உள்ளதோடு குறித்த 14வயது மாணவியை மேலதிக மருத்துவ பரிசோதனைக்காக நாவலபிட்டி மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்க உள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating