நவுறில் அகதிகள் தற்கொலை…!!
நவுறு தீவில் உள்ள அவுஸ்திரேலியாவின் அகதிகள் தடுப்பு முகாமில், மற்றுமொரு அகதி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
சோமாலியாவைச் சேர்ந்த 21 வயதான பெண் ஒருவர் தனக்கு தானே தீ மூட்டி தற்கொலை செய்துக் கொள்ள முயற்சித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய அரசாங்கம் தம்மை தொடர்ந்தும் தடுத்து வைத்துள்ளமைக்கு எதிராக அவர் இந்த தற்கொலை முயற்சியை மேற்கொண்டுள்ளார்.
கடந்த வாரம் ஈரானைச் சேர்ந்த அகதி ஒருவர் இவ்வாறு தீ மூட்டிக் கொண்டு தற்கொலை செய்திருந்தார்
அகதிகளின் உரிமைகளை மீறி அவுஸ்திரேலிய அரசாங்கம் பலவந்தமான முறையில் இவ்வாறான அகதி முகாம்களை நடத்தி வருகிறது
இதன் காரணமாக அங்குள்ள அகதிகள் மிகவும் மன அழுத்தத்துடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த முகாம்களுக்கு சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் எதிர்ப்புகளை வெளியிட்டு வருகின்றன.
நவுறு தீவு முகாமில் பல தமிழ் அகதிகளும் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Average Rating