பாடசாலை மாணவியை கடத்திய சாரதி அதிரடி கைது…!!

Read Time:1 Minute, 46 Second

rapeee-680x365-300x161நேற்று இரவு பொகவந்தலாவை மோரா தோட்டத்தில், 15 வயது பாடசாலை மாணவியை முச்சக்கரவண்டியில் கடத்திச்சென்ற நபரை, ஹட்டன் பொலிஸார் மடக்கி பிடித்துள்ளதுடன் மாணவியையும் மீட்டுள்ளனர்.

சேர்ந்த மேற்படி சிறுமி, வீட்டுக்கு வெளியேயுள்ள மலசலகூடத்துக்கு செல்வதாக கூறி சென்றுள்ளார்.

அவர் நீண்ட நேரமாகயும் வீட்டுக்கு வராததால் உறவினர்கள் அவரை தேடுவதற்கு ஆரம்பித்துள்ளனர். இதன்போது, சிறுமி கொண்டுச்சென்ற டோச் நிலத்தல் கிடந்துள்ளது.

இதனைக் கண்ட உறவினர்கள் அது தொடர்பில் பொகவந்தலாவை பொலிஸில் உடனடியாக முறைப்பாடு செய்துள்ளனர்.

முறைப்பாட்டையடுத்து விரைந்து செயற்பட்ட பொலிஸார், ஹட்டன், மஸ்கெலிய பிரதேச பொலிஸ் நிலையங்களுக்கு தகவல் வழங்கியதுடன் தேடுதல் நடவடிக்கையிலூம் ஈடுபட்டனர்.

இந்நிலையில் டிக்கோயா நகரில் கடமையிலிருந்த ஹட்டன் பொலிஸார், வீதியில் சந்தேகத்துகிடமாக பயணித்த முச்சக்கரவண்டியை சோதனையிட்டபோது, அதில் குறித்த சிறுமி இருந்ததாகவும் அவரை பாதுகாப்பாக மீட்டதுடன் முச்சக்கர வண்டியின் சாரதியையும் கைதுசெய்து பொகவந்தலாவை பொலிஸாரிடம் ஒப்படைத்ததாகவும் தெரிவித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிறந்த குழந்தையை தூக்கும் முறை…!!
Next post மீண்டும் ஆராயப்படவுள்ள சுண்ணாகம் நிலத்தடி நீர்…!!