துஷ்பிரயோகத்துக்கு முயற்சித்த நபரின் நாக்கைக் கடித்து துண்டாடிய சிறுமி..!!
குருணாகல், மாவத்தகம பிரதேசத்தில் தன்னை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயற்சித்த நபரொருவரின் நாக்கினை சிறுமியொருவர் கடித்து துண்டமாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிறுமியொருவர் தனது வீட்டினுள் தனிமையிலிருந்த வேளையில் அப் பிரதேசத்தை சேர்ந்த நபரொருவர் அவ்வீட்டுக்குள் நுழைந்து அவரை பலவந்தமாக கட்டாயப்படுத்தி அவரை துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்க முயற்சித்துள்ளார்.
இச்சந்தேக நபர் சிறுமியின் உதட்டினை முத்தமிடுவதற்கு முயற்சித்த வேளையில் குறித்த சிறுமி சந்தேக நபரின் நாக்கினை கடித்து துண்டாக்கியுள்ளார்.
இதனையடுத்து சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளதாகவும் அதன்பின்னர் குறித்த சிறுமியும் அவரது தாயும் துண்டாக்கப்பட்ட நாக்கு பகுதியை எடுத்துக் கொண்டு பொலிஸ் நிலையத்துக்கு சென்று நடந்தவற்றை தெரிவித்து முறைப்பாடு செய்துள்ளனர்.
அதன்பின்னர் முறைப்பாட்டாளர்களினால் கொண்டுவரப்பட்ட நாக்குத் துண்டம் பாதுகாப்பாக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ள நிலையில் அவரை கைது செய்யும் நோக்கில் மாவத்தகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating