பீகாரில் ஓடும் ரெயிலில் பயணி குத்திக்கொலை..!!
பீகார் மாநிலம் பாட்னாவில் இருந்து திகா என்ற இடத்துக்கு பயணிகள் ரெயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த ரெயில் ராஜேந்தர் நகருக்கு அருகே சென்றபோது ரெயிலில் இருந்த திருடன் ஒருவன் பயணிகளிடம் கொள்ளையடிக்க முயன்றான். இதை கண்டு அதிர்ச்சியடைந்த பயணிகள் 2 பேர் அவனது கொள்ளை முயற்சியை தடுத்து, அவனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த திருடன் அவர்கள் 2 பேரையும் கத்தியால் சரமாரியாக குத்தினான்.
இதில் பயணிகள் இருவரும் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். பின்னர் அந்த திருடன் ரெயிலில் இருந்து குதித்து தப்பி ஓடிவிட்டான். அருகில் இருந்தவர்கள் பயணிகள் இருவரையும் மீட்டு பாட்னா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் உயிருக்கு போராடி வருகிறார். அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய திருடனை வலை வீசி தேடி வருகின்றனர்.
Average Rating