கனடாவில் வேகமாக பரவும் காட்டுத் தீ: வீடுகள் எரிந்து நாசம்…!!
கனடாவின் அல்பெர்ட்டா மாகாணத்தின்Fort McMurray நகரில் காட்டுத் தீ வேகமாக பரவி வருகிறது.
எனவே நகரில் இருக்கும் ஒட்டுமொத்த மக்களையும் வெளியேறுமாறு அந்நாட்டு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இதனையடுத்து குறைந்தது 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களை பாதுகாப்பாக வெளியேற்றும் பணியில் மீட்புப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.
இதுவரையிலும் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்ற போதிலும், எங்கு பார்த்தாலும் புகை மண்டலமாக காட்சியளிப்பதால் மக்கள் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர்.
இந்த விபத்தில் வீடுகள், பெட்ரோல்நி லையங்கள் மற்றும் ஹொட்டல் எரிந்து நாசமாகியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து Rachel Notley என்பவர் கூறுகையில், அல்பெர்ட்டா மாகாண வரலாற்றிலேயே இது ஒரு பாரிய விபத்து எனவும், மக்களின் பாதுகாப்புக்கே முன்னுரிமை வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
Average Rating