கேரளாவில் மேலும் ஒரு தலித் மாணவி கற்பழிப்பு..!!
கேரள மாநில தலைநகரான திருவனந்தபுரத்தில் நர்சிங் பயிற்சி மாணவி கடத்தி, கற்பழிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுமார் 19 வயது மதிக்கத்தக்க, அந்த தலித் பெண் இங்குள்ள நர்சிங் பயிற்சி கல்லூரியில் பி.எஸ்.சி. படித்து வருகிறார். வர்காலா பகுதியில் நேற்று, தனக்கு அறிமுகமான ஒருவரின் ஆட்டோ ரிக்ஷாவில் ஏறிச்சென்றபோது, வழியில் அந்த ஆட்டோ டிரைவரின் நண்பர்களான இருவர் அதில் ஏறினர். பின்னர், அந்தப் பெண்ணை பலவந்தமாக அவர்கள் கடத்திச் சென்றனர்.
அயந்தி பாலத்தை தாண்டி தனிமையான பகுதிக்கு ஆட்டோவை ஓட்டிச்சென்ற அவர்கள், அந்தப்பெண்ணை கீழே இறக்கி, அவரை மாறி, மாறி கற்பழித்துவிட்டு நடுத்தெருவில் வீசிவிட்டு தப்பிச் சென்றனர். எதிர்பாராத இந்த தாக்குதலால் அதிர்ச்சிக்குள்ளான அந்தப் பெண், வலிப்புவந்த நிலையில் அங்கு உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதைப் பார்த்த சிலர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
ஆம்புலன்ஸ் வாகனத்துடன் சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த போலீசார், அவரை திருவனந்தபுரம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருக்கும் மூன்று குற்றவாளிகளையும் போலீசார் தேடிவருகின்றனர்.
டெல்லியில் ஓடும் பஸ்சில் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட நிர்பயா என்ற மருத்துவ மாணவியின் படுகொலையைவிட மிகவும் காட்டுமிராண்டித்தனமாக கேரளாவில் வக்கீலுக்கு படித்துவந்த ஒரு தலித் பெண் சமீபத்தில் சித்ரவதை செய்து கொல்லப்பட்டுள்ள நிலையில் நேற்று நடைபெற்ற இந்த சம்பவம் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Average Rating