அமெரிக்காவில் இந்தியப்பெண் சுட்டுக்கொலை: கணவர் கைது..!!

Read Time:2 Minute, 51 Second

timthumb (1)அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் 3-வது பெரிய நகரம் சான்ஜோஸ். இந்த நகரத்தில் இண்டிகோ ஓக் வீதியில் உள்ள வீட்டில் வசித்து வந்தவர்கள் ஜேம்ஸ் நல்லான்- சோனியா நல்லான் (வயது 48) தம்பதியர் இந்தியர்கள். இந்த தம்பதியருக்கு சல் (21), நிதின் (20) என 2 மகன்கள். அவர்கள் அங்கு படித்து வருகின்றனர்.

சோனியா என்கோர் செமிகாண்டக்டர்ஸ் நிறுவனத்தில் தொழில் நுட்ப ஆள் சேர்ப்பாளராக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் கடந்த 30-ந் தேதி சோனியாவை கணவர் ஜேம்ஸ் நல்லான் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு வீழ்த்தினார். குண்டு சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தார் அங்கு விரைந்து சென்று, ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்த சோனியாவை மீட்டு மருத்துவமனைக்கு எடுத்துச்சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே அவரது உயிர் பிரிந்து விட்டதாக அறிவித்தனர்.

இந்த படுகொலை சம்பவம், அக்கம்பக்கத்தாரை மட்டுமல்ல, இருவருடைய குடும்பத்தாரையும் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

சோனியாவின் படுகொலை குறித்த தகவல் அறிந்ததும், ஜேம்ஸ் நல்லானின் சகோதரர் கிறிஸ் நல்லான் அங்கு உடனடியாக சென்றார். அற்புதமான வாழ்க்கை வாழ்ந்து வந்தவர்கள் என அவர் தனது அண்ணன், அண்ணியைப் பற்றி குறிப்பிட்டார். சோனியாவும், ஜேம்ஸ் நல்லானும் ஒரு நிறுவனத்தில் ஒன்றாக சந்தித்து, பேசி பழகி மணந்து கொண்டதாகவும் கிறிஸ் நல்லான் தெரிவித்தார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வீட்டில் ஏதோ வேலை செய்து கொண்டிருந்தபோது ஜேம்ஸ் கீழே தவறி விழுந்து கோமா நிலைக்கு சென்று மீண்டதாகவும், வேலை செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டபோதும், அண்ணி அவரை நன்றாக கவனித்துக்கொண்டதாகவும் கிறிஸ் நல்லான் கூறினார்.

இந்த கொலைச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து ஜேம்ஸ் நல்லானை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கேரளாவில் மேலும் ஒரு தலித் மாணவி கற்பழிப்பு..!!
Next post கோவையில் காதலியை அழைத்து சென்று நண்பருடன் கற்பழித்த வாலிபர் 3 பேர் கைது..!!