மின்சாரம் தாக்கி இளைஞர் பலி; அறுவர் வைத்தியசாலையில்…!!
Read Time:58 Second
சுண்ணாகம் சிவன் கோவிலில் மின் பழுதுபார்த்தல் வேலையில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
சுண்ணாகம் சிவன் கோவிலின் திருவிழா இன்று காலை ஆரம்பாகியுள்ள நிலையில், கோவிலில் மின்சார வேலையில் ஈடுபட்டிருந்த 07 இளைஞர்களை மின்சாரம் தாக்கியுள்ளதுடன், அதில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
காயமடைந்த ஏனைய அறுவரும் தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
Average Rating