போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவில் இருந்து டென்மார்க்கும் விலகுகிறது
Read Time:1 Minute, 3 Second
இலங்கை போர் நிறுத்த கண்காணிப்பு குழுவில் இருந்து டென்மார்க் விலகியுள்ளதாக இலங்கை போர் நிறுத்த கண்காணிப்பு குழுவின் பேச்சாளரான தொர்ஃபின் ஒமர்சன் தெரிவித்துள்ளார். பின்லாந்து மற்றும் டென்மார்க் ஆகிய இருநாடுகளுமே செப்டம்பர் ஒன்றாம் ஆம் திகதிக்கு முன்பாக விலகவுள்ளதினை அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவில் இருக்கின்ற மொத்தவுள்ள 57 பேர்களில் இருபத்திரண்டு பேர் இந்த இரு நாடுகளையும் சேர்ந்தவர்கள் என்பதால், போர் நிறுத்த கண்காணிப்பு குழுவின் செயற்பாடுகள் இதனால் மோசமாகப்பாதிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.