கோவையில் காதலியை அழைத்து சென்று நண்பருடன் கற்பழித்த வாலிபர் 3 பேர் கைது…!!

Read Time:2 Minute, 51 Second

201605050927048444_girlfriend-molested-case-Coimbatore-three-youth-arrested_SECVPFகோவையில் காதலியை அழைத்து சென்று நண்பருடன் கற்பழித்த வாலிபர் 3 பேரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

கோவை உக்கடத்தை சேர்ந்தவர் சிவக்குமார். கூலித்தொழிலாளி. இவரது மகள் வசந்தி (வயது 17). (பெயர் மாற்றப்பட்டுள்ளது).

கடந்த 2 மாதத்துக்கு முன்பு வசந்திக்கு அதே பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பவரது மகன் பிரகாஷ் (25) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. காதலர்கள் அடிக்கடி சந்தித்து தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

இந்தநிலையில் பிரகாஷ் வசந்தியை அவரது நண்பரான மற்றொரு பிரகாஷ் என்பவரது வீட்டுக்கு அழைத்து சென்றார். அங்கு 2 பேர் இருந்தனர். வசந்தியின் காதலன் பிரகாஷ், அவரது நண்பர் பிரகாஷ் ஆகியோர் சேர்ந்து வசந்தியை கட்டாயப்படுத்தி கற்பழித்தனர். இந்த சம்பவத்துக்கு அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவரது மகன் மணிவண்ணன்(25) உடந்தையாக இருந்தாக கூறப்படுகிறது.

பின்னர் அவர்கள் 3 பேரும் சேர்ந்து நாங்கள் உன்னை நிர்வாணமாக செல்போனில் படம் பிடித்துள்ளோம் நடந்த சம்பவத்தை வெளியே சொன்னால் படத்தை இன்டர்நெட்டில் வெளியிட்டு விடுவதாக கூறி மிரட்டி அனுப்பி வைத்தனர்.

பின்னர் வசந்தி அவரது வீட்டுக்கு சென்றார். வசந்தி தாமதமாக வீட்டுக்கு வந்ததால் அவரது பெற்றோர் அவரை கண்டித்து வீட்டை விட்டு விரட்டியடித்தனர்.

இதில் மனவேதனை அடைந்த வசந்தி அழுது கொண்டே நள்ளிரவில் உக்கடம் பஸ் நிலையத்தில் அமர்ந்து இருந்தார்.

அப்போது அங்கு ரோந்து சென்ற போலீசார் வசந்தி தனியாக அழுதுகொண்டு அமர்ந்து இருப்பதை பார்த்தனர்.

பின்னர் அவரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது வசந்தி நடந்த சம்பவத்தை போலீசாரிடம் கூறினார்.

அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வசந்தியை கற்பழித்த காதலன் பிரகாஷ், அவரது நண்பர் பிரகாஷ், இந்த சம்பவத்துக்கு உடந்தையாக மணிவண்ணன் ஆகிய 3 பேரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post போதைப்பொருள் கடத்தியவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்ற தயார் நிலையில் இந்தோனேசியா..!!
Next post உத்தர பிரதேசத்தில் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 2 குழந்தைகள் உயிரிழப்பு – 46 பேருக்கு சிகிச்சை…!!