சத்தீஷ்காரில் பஸ் ஓடையில் கவிழ்ந்து விபத்து: பலி எண்ணிக்கை 17 ஆக உயர்வு..!!

Read Time:1 Minute, 33 Second

timthumb (6)ஜார்க்கண்ட் மாநிலம் கர்வா மாவட்டத்தில் இருந்து சத்தீஷ்கார் மாநிலம் ராய்ப்பூருக்கு நேற்று முன்தினம் இரவு சொகுசு பஸ் ஒன்று புறப்பட்டது. இந்த பஸ் பல்ராம்பூர்- அம்பீகாப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது, அங்கிருந்த சிறிய பாலம் ஒன்றில் பஸ்சை டிரைவர் வேகமாக ஓட்டிச்சென்றார்.

அப்போது எதிர்பாராத வகையில் பஸ் எதிரே வந்த 2 மோட்டார் சைக்கிளின் மீது மோதி நிலை தடுமாறி பாலத்தை இடித்துக்கொண்டு வற்றிப்போன ஓடையில் கவிழ்ந்தது.

இந்த கோரவிபத்தில் மோட்டார்சைக்கிள்களில் வந்த 2 பேர் உள்பட 13 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் 4 பேர் உயிரிழந்தனர்.

படுகாயம் அடைந்தவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கொழும்பின் பல பிரதேசங்களிலும் இன்றைய தினம் நீர் வெட்டு..!!
Next post வெள்ளவத்தையில் கைது செய்யப்பட்ட தாய்லாந்து பாலியல் தொழிலாளிக்கு எயிட்ஸ்..!!