ஆபத்தான நிலையிலுள்ள மரங்களுக்கு விசேட சத்திர சிகிச்சைகள்..!!
இந்தியாவின் புது டில்லி மாநகர சபை அதிகாரிகள் ஆபத்தான நிலையிலுள்ள மரங்களைக் காப்பாற்றுவதற்காக அவற்றுக்கு “சத்திரசிகிச்சைகளை” அளித்து வருகின்றனர்.
பழைய மற்றும் பூச்சிகளால் அரிக்கப்பட்டு பாதிக்கப்பட்டுள்ள பாரிய மரங்களின் சேதமடைந்த பகுதிகளை குடைந்தெடுத்து அவற்றுக்கு உறுதியளிக்கும் விதமான கோல்களைப் புகுத்தி அப்பகுதி மூடப்படுகிறது.
புது டில்லி மாநகர சபையின் தாவரங்களைப் பாதுகாக்கும் நிபுணர்கள் குழுவொன்று இந்நடவடிக்கையில் ஈடுபடுட்டுள்ளது.
இந்தியாவில் இத்தகைய மரங்களுக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளும் முதல் மாநகர சபை இது எனத் தெரிவிக்கப்படுகிறது.
“எமது எல்லைக்குட்பட்ட பிரதேதசத்திலுள்ள அனைத்து மரங்கள் தொடர்பாகவும் நாம் ஆய்வொன்றை மேற்கொண்டோம்.
அவற்றில் பல மரங்கள் மிக வயதானவையாகவும் நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பதையும் அறிந்தோம்” என புது டில்லி மாநகர சபையின் தவிசாளர் நரேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
மனிதர்களின் எலும்புகளுக்கு உறுதியளிப்பதற்காக கோல்கள் புகுத்தப்படுவதைப் போல் மரங்களுக்கு சில வருடங்களின் பின்னர் இவ்வாறு கோல்கள் புகுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மக்களின் மீது மரங்கள் வீழ்ந்துவிடும் ஆபத்தை தவிர்ப்பதும் இச்சிகிச்சைகளின் நோக்கங்களின் ஒன்றாகும் எனவும் நரேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
ஜேர்மனி போன்ற நாடுகளில் மரங்களின் ஆரோக்கியம் விசேட ஈ.சி.ஜி. இயந்திரங்களின் மூலம் அடிக்கடி சோதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
Average Rating