நான் பிரித்தானியன்…நீ ஆப்பிரிக்கன்: இனவெறி வார்த்தைகளால் நடந்த சண்டை…!!
பிரித்தானியாவில் ஓடும் பேருந்தில் வைத்து வெள்ளையின நபரும், கருப்பின நபரும் சண்டையிட்டுக் கொண்டதால் சகபயணிகள் ஆத்திரத்தின் உச்சகட்டத்திற்கு சென்றுள்ளனர்.
ஓடும் பேருந்தில் வைத்து வெள்ளையின நபர், கருப்பின நபரிடம் இனவெறி வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளார்,
இதனால் கோபம் கொண்ட கருப்பின நபர், வெள்ளையின நபரை அடித்துக்கீழே தள்ளி அவர் மீது ஏறி நின்றுகொண்டு, இனவாத வார்த்தைகளை பயன்படுத்தக்கூடாது என கூறியவாறு சத்தம் போடுகிறார்.
அடியில் இருக்கும் வெள்ளையின நபர், மிகுந்த சிரமத்துடன் மீண்டெழுந்து கருப்பின நபரை தாக்குகிறார், இந்த சண்டைக்கு இடையில் குறுக்கிடும் கருப்பின நபர், நீ பயன்படுத்திய வார்த்தைகளை இங்கு அனைவரும் கேட்டுக்கொண்டிருக்கின்றனர்.
பேருந்தில் கமெரா இருப்பதால் நீ தப்பித்துள்ளாய், இல்லையென்றால் உனது முகத்தில் உதைத்திருப்போம் என கூறுகிறார்.
இருப்பினும் வெள்ளையின நபர், நான் பிரித்தானியாவை சேர்ந்தவன், அவன் ஆப்பிரிக்காவில் இருந்து வந்தவன் என இனவெறி வார்தைகளை தொடர, இடையில் குறுக்கிட்ட பெண்மணி ஒருவர், சண்டையை நிறுத்துங்கள், நாங்களும் பேருந்தில் பயணிக்கிறோம், எங்கள் குழந்தைகளை பாதுகாப்பாக அழைத்துச்செல்ல வேண்டும் என கோபமாக தெரிவிக்கிறார்.
இதனால் சண்டை கைவிடப்படவே, இதுகுறித்து மெட்ரோ பொலிசாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Average Rating