சிறுமியை கடத்தியவர் 10 நாளின் பின்பு கைது; சிறுமி மீட்பு…!!

Read Time:2 Minute, 8 Second

arrest (2)மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் 16 வயது சிறுமி ஒருவரை முச்சக்கரவண்டி ஒன்றில் கடத்திச் சென்ற அக்கரைப்பற்றைச் சேர்ந்த 43 வயதுடைய ஒருவரை நேற்று வெள்ளிக்கிழமை (6) இரவு கைது செய்துள்ளதுடன் சிறுமியை மீட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிசார் தெரிவித்தனர்

கடந்த மாதம் 27 ம்திகதி கொக்கட்டிச்சோலை அரசடித்தீவில் மாலைநேரம் பிரத்தியோக வகுப்புக்குச் சென்று திரும்புகையில் அச்சிறுமி அரசடித்தீவில் வைத்து முச்சக்கரவண்டியில் வந்த குறித்த நபரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.

இதனையடுத்து பெற்றோர் கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு தெரிவித்தனர்.

இச் சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யவில்லை என கடத்தப்பட்ட சிறுமியின் பெற்றோர் புதன்கிழமை (4) மட்டக்களப்பு மனித உரிமை ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

இந்த நிலையில் சிறுமியைக் கடத்திச் சென்றவரை நேற்று வெள்ளிக்கிழமை இரவு 10 மணியளவில் கைது செய்துள்ளதுடன் கடத்திச் செல்லப்பட்ட சிறுமியையும் மீட்டுள்ளனர்.

இச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையான 43 வயதுடைய அக்கரைப்பற்றைச் சேர்ந்தவர் என பொலிசாரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது என பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிசார் மேற் கொண்டுவருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நான் பிரித்தானியன்…நீ ஆப்பிரிக்கன்: இனவெறி வார்த்தைகளால் நடந்த சண்டை…!!
Next post குளிர்பானங்களை பருக வேண்டாம் – அரச வைத்திய அதிகாரிகள்…!!