கள்ளக்காதலுக்காக தாயை கத்தியால் வெட்டிய மகள் தலைமறைவு…!!

Read Time:1 Minute, 45 Second

cut by sword (5)இளைஞன் ஒருவருடன் ஏற்பட்ட கள்ளக்காதலை நிறுத்தும்படி கூறிய தாயின் எச்சரிக்கையை தாங்க முடியாத மகள், தனது தாயை கத்தியால் வெட்டிய சம்பவம் ஒன்று பதுளை புறநகர் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

வெட்டுக்காயங்களுக்குள்ளான தாய் பதுளை அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்நிலையில் தாயின் நிலை கவலைகிடமாக இல்லை என்றும் சத்திரசிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

மேற்படி சம்பவம் தொடர்பாக பதுளை பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட புகாரையடுத்து குறிப்பிட்ட யுவதியை கைதுசெய்ய முயன்ற போதிலும் குறித்த யுவதி பிரதேசத்தினை விட்டு தலைமறைவாகியுள்ளார்.

குறித்த யுவதியை கைதுசெய்ய பதுளை பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மகளின் கள்ளக்காதல் குடும்பத்துக்கு ஏற்றதல்ல இதனை உடனடியாக நிறுத்திக்கொள்ளும்படி தாய் மகளை கடுமையாக எச்சரித்ததன் விளைவாகவே ஆத்திரம் கொண்ட மகள் சமையலறையில் இருந்த கத்தியொன்றை எடுத்து தனது தாயை வெட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குளிர்பானங்களை பருக வேண்டாம் – அரச வைத்திய அதிகாரிகள்…!!
Next post திருட்டுத்தனமாக மின்சாரம் பெறமுயன்ற சிறுவன் உடல் கருகிப் பலி…!!