ஏரியில் விழுந்து உயிருக்கு போராடிய 83 வயதான முதியவர்: கடவுள் போல் காப்பாற்றிய வாலிபர்…!!
சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஏரி ஒன்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடிய 83 வயதான முதியவரை வாலிபர் ஒருவர் காப்பாற்றியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுவிஸின் சூரிச் ஏரியில் நேற்று முன் தினம் படகு சவாரி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இந்த படகு சவாரியில் 83 வயதான முதியவர் உள்பட சில நபர்களும் பயணம் செய்துள்ளனர்.
அப்போது படகு ஏரியின் மையத்தில் சென்றுக்கொண்டு இருந்தபோது, படகின் ஓரத்தில் அமர்ந்திருந்த முதியவர் திடீரென தண்ணீரில் விழுந்துள்ளார்.
அப்போது, படகில் இருந்தவர்கள் முதியவரை நோக்கி தண்ணீரில் மிதக்கும் பிளாஸ்டிக் சக்கரத்தை வீசியுள்ளனர்.
ஆனால், முதியவரால் அதனை பற்றிக்கொண்டு தப்பிக்க முடியாமல் தண்ணீரில் மூழ்கியுள்ளார்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த வாலிபர் ஒருவர் கண நேரமும் சிந்திக்காமல் தண்ணீரில் குதித்து முதியவரை காப்பாற்றி படகில் கொண்டு வந்து சேர்த்துள்ளார்.
ஆனால், தண்ணீரில் முழ்கியதில் முதியவருக்கு மயக்கம் ஏற்பட்டுருந்தது. உடனடியாக மருத்துவ ஹெலிகொப்டருக்கு தகவல் அளிக்கப்பட்டு அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
சரியான நேரத்தில் முதியவர் மருத்துவமனையில் அனுமதிகப்பட்டதால், எந்தவித ஆபத்தும் இன்றி அவர் காப்பாற்றப்பட்டார்.
தன்னுடைய உயிரைக் கூட மதிக்காமல் ஏரியில் குதித்து முதியவரை காப்பாற்றிய வாலிபரின் தைரியத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
Average Rating