பெல்ஜியம் இளம் பெண்ணுக்கு புதுடெல்லியில் டாக்ஸி டிரைவர் பாலியல் தொந்தரவு..!!
Read Time:1 Minute, 14 Second
பெல்ஜியம் நாட்டை சேர்ந்த 23 வயது மிக்க இளம் பெண் ஒருவர் தலைநகர் புதுடெல்லியில் உள்ள காவல்நிலையத்தில் புகார் ஒன்றினை அளித்துள்ளார். அதில், டாக்ஸி டிரைவர் ஒருவர் தனக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக தெரிவித்துள்ளார்.
தன்னுடைய புகாரில், தனியார் டாக்ஸியை பதிவு செய்து குர்கானில் இருந்து பயணம் மேற்கொண்டதாகவும், பயணத்தின் இடையில் டிரைவர் தனக்கு முத்தம் கொடுக்க முயற்சித்ததாக கூறியுள்ளார்.
டாக்ஸியில் இருந்து இறங்கியதும் தென் கிழக்கு டெல்லியில் உள்ள சி.ஆர்.பார்க் பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் அந்த பெண் நேற்று இரவு 10 மணியளவில் புகார் அளித்துள்ளார்.
புகாரை பெற்றுக் கொண்டதாகவும், விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் சி.ஆர்.பார்க் போலீசார் தெரிவித்தனர்.
Average Rating