சிரியாவுக்குள் நுழைந்து துருக்கி போர்விமானங்கள் அதிரடி தாக்குதல்: 55 ஐ.எஸ். தீவிரவாதிகள் பலி…!!

Read Time:2 Minute, 6 Second

201605081518468825_Turkish-military-kills-55-Islamic-State-fighters-north-of_SECVPFசிரியாவின் அலெப்போ நகரில் உள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளின் முகாம்களை குறிவைத்து துருக்கி நாட்டு போர்விமானங்கள் நடத்திய அதிரடி தாக்குதலில் ஐ.எஸ். தீவிரவாதிகள் 55 பேர் கொல்லப்பட்டனர்.

ஈராக் மற்றும் சிரியா நாடுகளின் சிலபகுதிகளை கைப்பற்றி அங்கு அட்டூழியம் செய்துவரும் ஐ.எஸ். தீவிரவாதிகள் சிரியாவின் அண்டைநாடான துருக்கியின் எல்லைப்பகுதி அருகே முகாம்களை அமைத்து அங்கிருந்தவாறு துருக்கியின் முக்கிய நகரங்களை கைப்பற்ற முயன்று வருகின்றனர்.

இந்த முயற்சியை முறியடிக்க துருக்கி ராணுவம் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எனினும், நவீனரக ராக்கெட்கள் மற்றும் ஏவுகணைகளை துருக்கியின்மீது வீசி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இதற்கு பதிலடியாக, சிரியாவின் அலெப்போ நகரில் உள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளின் முகாம்களை குறிவைத்து போர்விமானங்கள் மற்றும் ஆளில்லா விமானங்களின் மூலம் நேற்று துருக்கி ராணுவம் நேற்று அதிரடி தாக்குதலில் ஈடுபட்டது.

இந்த தாக்குதலில் ஐ.எஸ். தீவிரவாதிகள் 55 பேர் கொல்லப்பட்டதாக துருக்கி ஊடகங்கள் இன்று தெரிவித்துள்ளன. ஐ.எஸ். தீவிரவாதிகளிக்கு சொந்தமான மூன்று ராணுவ வாகனங்கள் மற்றும் ராக்கெட் ஏவுதளங்கள் இந்த தாக்குதலில் அழிக்கப்பட்டதாக துருக்கி ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆப்கானிஸ்தான்: டேங்கர் லாரிமீது இன்று பஸ் மோதிய விபத்தில் 52 பேர் உயிரிழந்தனர்…!!
Next post குறும்பு தனம் செய்த 7 வயது மகளை தண்ணீரில் அமுக்கி கொன்ற தாய்…!!