குறும்பு தனம் செய்த 7 வயது மகளை தண்ணீரில் அமுக்கி கொன்ற தாய்…!!

Read Time:2 Minute, 10 Second

201605081344508786_Mum-drowned-her-seven-year-old-daughter-in-front-of-her-son_SECVPF (1)அமெரிக்காவின் புளோ ரிடாவில் உள்ள எஸ்டோ பகுதியில் குறும்பு தனம் செய்த மகளை தண்ணீரில் அமுக்கி கொலை செய்த தாயின் செயல் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் புளோ ரிடாவில் உள்ள எஸ்டோ பகுதியை சேர்ந்த பெண் அமன்டா லீவிஸ். இவரது மகள் அட்ரியானா ஹட்டோ (7). வீட்டில் உள்ள நீச்சல் குளத்தில் தண்ணீரை சுத்தம் செய்த போது அட்ரியானா ஹட்டோ தண்ணீரில் விழுந்து விட்டதாக கூறி அவளை தாயார் அமன்டா லீவிஸ் ஆஸ்பத்திரிக்கு தூக்கி வந்தார்.

அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருந்தும் அவள் பரிதாபமாக இறந்தாள். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போதும் தனது மகள் தண்ணீரில் தவறி விழுந்து விட்டதாக தாயார் அமன்டா திரும்ப திரும்ப தெரிவித்தார்.

அப்போது அவரது மகன் ஏ.ஜே. ஹட்டோ என்பவன் தனது தாய் அமன்டா தங்கை அட்ரியானாவை நீச்சல் குளத்தில் தள்ளி தண்ணீரில் அமுக்கி கொலை செய்ததாக கூறி உண்மையை போட்டு உடைத்தான்.

நீச்சல் குளத்தை அமன்டா சுத்தம் செய்த போது சிறுமி அட்ரியானா குறும்புத்தனம் செய்து கொண்டிருந்தாள். எவ்வளவோ சொல்லியும் அவள் கேட்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அமன்டா தனது மகள் எனும் பாராமல் அட்ரியானாவை நீச்சல் குளத்துக்குள் தள்ளி தண்ணீரில் அழுத்தி கொன்றார். பெற்ற மகளை கொடூரமாக கொன்ற ஒரு தாயின் செயல் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிரியாவுக்குள் நுழைந்து துருக்கி போர்விமானங்கள் அதிரடி தாக்குதல்: 55 ஐ.எஸ். தீவிரவாதிகள் பலி…!!
Next post மன நோயாளியை கொன்று விஷ ஊசியை பரிசோதனை செய்தோம்: ரியல் எஸ்டேட் அதிபர் வாக்குமூலம்…!!