கிளிநொச்சி கால்வாய்க்கு அருகிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு…!!
Read Time:51 Second
கிளிநொச்சி – புளியம்பொக்கனை பகுதி கால்வாய்க்கு அருகில் இருந்து சிசுவொன்றின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அப் பகுதி மீனவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் குறித்த சிசுவை மீட்டுள்ளனர்.
இந்த சிசு பிறந்து ஒரு நாட்களே உள்ள நிலையில் இவ்வாறு வீசப்பட்டுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த சடலம் தொடர்பிலான நீதவான் மற்றும் பிரேதப் பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளன.
தர்மபுரம் பொலிஸார் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating