அமெரிக்காவில் அண்ணனை சுட்டு கொன்ற தம்பி…!!
Read Time:1 Minute, 8 Second
புளோரிடாவில் பர்கர் உணவு பரிமாற்றத்தின் போது ஏற்பட்ட மோதலில் அண்ணனை துப்பாக்கியால் சுட்டு கொன்ற தம்பியால் பரபரப்பு ஏற்பட்டது
அமெரிக்காவில் புளோரிடாவில் உள்ள செயின்ட் கிளவுட் பகுதியை சேர்ந்தவர் பெஞ்சமின் மிட்டன் டோர்ப் (25). சம்பவத்தன்று இரவு இவர்களது வீட்டில் பர்கர் உணவு தயாரிக்கப்பட்டது.
அதை பங்கிட்டு கொள்வதில் அவர்களுக்கு இடையே சண்டை ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த பெஞ்சமின் தனது அண்ணன் நிகோலசை கைத்துப்பாக்கியால் சுட்டார். இதனால் நிகோலஸ் மார்பில் குண்டு பாய்ந்தது. இதனால் ரத்த வெள்ளத்தில் மயங்கி சரிந்த நிகோலஸ் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் தம்பி பெஞ்சமினை கைது செய்தனர்.
Average Rating