சாலையில் உயிருக்கு போராடிய பெண்: முதலுதவி சிகிச்சை அளித்தும் உயிரிழந்த பரிதாபம்…!!

Read Time:2 Minute, 4 Second

625.117.560.350.160.300.053.800.210.160.70சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள சாலை ஒன்றில் விபத்தால் காயமுற்ற பெண் ஒருவருக்கு விரைந்து சிகிச்சை அளித்தும் பலனில்லாமல் பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சுவிஸின் பேர்ன் மாகாணத்தில் உள்ள Kappelen என்ற நகரை சேர்ந்த பொலிசாருக்கு நேற்று அதிகாலை 5.10 மணியளவில் அவசர தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

தகவல் பெற்று பொலிசார் மருத்துவ வாகனத்துடன் A6 நெடுஞ்சாலைக்கு விரைந்துள்ளனர்.

பொலிசார் சென்றபோது, சாலையின் மையத்தில் பெண் ஒருவர் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்துள்ளார்.

உடனடியாக பெண்ணிற்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வாகனத்தில் ஏற்ற மருத்துவர்கள் முயன்றுள்ளனர். ஆனால், சில நிமிடங்கள் போராடிய அந்த பெண் அதே இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

பெண் கிடந்த இடத்தை பொலிசார் ஆய்வு செய்தபோது, அருகில் ஒரு மின்சார சைக்கிள் இருந்துள்ளது. ஆனால், சைக்கிளிற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

எனவே, இவர் நடந்து சென்றுருக்கும் போது வாகனம் மோதி உயிரிழந்துள்ளாரா என பொலிசார் சந்தேகம் அடைந்துள்ளனர்.

மேலும், 46 வயதுள்ள அந்த பெண் குறித்து எந்த தகவலும் கிடைக்காத நிலையில், இந்த உயிரிழப்பு தொடர்பாக பொலிசார் 22 வயதான வாலிபர் ஒருவரிடம் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புதுக்கோட்டை-திருச்சியில் சூறாவளியுடன் மழை: இடி விழுந்ததில் வீடு சேதம்…!!
Next post வீடு இல்லாமல் தவிக்கும் மக்களுக்கு ரூ. 3 லட்சம் நிதி திரட்டிய 5 வயது சிறுவன்…!!