நாளை இங்கிலாந்து செல்லும் ஜனாதிபதி..!!
Read Time:54 Second
பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூனின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை இங்கிலாந்துக்கு விஜயம் செய்யவுள்ளார்.
இதன்படி, லண்டன் நகரில் இடம்பெறவுள்ள ஊழலுக்கு எதிரான உலகத் தலைவர்களின் சர்வதேச மாநாட்டில் அவர் கலந்து கொள்ளவுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, பிரித்தானியாவுக்கான விஜயத்தை நிறைவு செய்ததும் ஜனாதிபதி, இந்தியா செல்லவுள்ளார்.
அங்கு மத்திய பிரதேசத்திலுள்ள இந்து ஆலயத்தில் நடைபெறும் கும்பமேள சமய வைபத்திலும் அவர் கலந்து கொள்ளவுள்ளார்.
Average Rating