அயனாவரம் ரவுடி கொலையில் 3 பேர் சிக்கினர்…!!
Read Time:1 Minute, 14 Second
ஆவடியை அடுத்த பூம்மொழில் நகரை சேர்ந்தவர் கார்த்திக் (30) ரவுடி. இவர் கடந்த வாரம் அயனாவரும் சன்னியாசிபுரத்தில் உள்ள நண்பர்களை பார்க்க சென்றார்.
அப்போது 4 பேர் கும்பல் அவரை ஓட ஓட விரட்டி வெட்டி கொன்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து அயனாவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கந்தவேலு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த நிலையில் கொலையாளிகள் சன்னியாசிபுரத்தை சேர்ந்த 3 பேர் போலீசில் சிக்கினர். மதுக்கடையில் ஏற்பட்ட தகராறில் ரவுடி கார்த்திக்கை தீர்த்துக் கட்டியதாக தெரிவித்து உள்ளனர்.
கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? இதில் தொடர்புடையவர்கள் யார்-யார்? என்றும் விசாரணை நடந்து வருகிறது.
Average Rating