சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை…!!

Read Time:3 Minute, 18 Second

201605101706164455_youth-life-sentenced-on-molested-case_SECVPFசிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை வழங்கி கோர்ட்டு தீர்ப்பளித்தது.

ஈரோடு சாஸ்திரி நகரை சேர்ந்தவர் பரமசிவம் (வயது 51). இவரது மனைவி நிர்மலா தேவி (46). இவர்களது மகன் யுவபிரகாஷ் (25).

யுவபிரகாஷ் வீடு வீடாக சென்று தண்ணீர் கேன் சப்ளை செய்து வந்தார். இந்த நிலையில் இவருக்கும் அந்த பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது.

சம்பவத்தன்று உறவினர்களுடன் வெளியே சென்ற சிறுமியை ஒரு தனியார் பள்ளி அருகே யுவபிரகாஷ் மோட்டார் சைக்கிளில் வந்து மிரட்டி கட்டாயமாக கடத்தி சென்றார்.

எதிர்ப்பு தெரிவித்த சிறுமியிடம் பின்னால் என் நண்பர்கள் வேனில் வருகிறார்கள் முரண்டு பிடித்து கீழே குதித்தால் வேனை ஏற்றி கொன்று விடுவோம் என்று மிரட்டினாராம்.

பிறகு விளக்கேத்தி அருகே உள்ள ஓலப்பாளையத்தில் ஒரு வீட்டில் சிறுமியை அடைத்து வைத்து யுவ பிரகாஷ் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

பிறகு கொடுமுடி கோவிலில் சிறுமியை கட்டாயப்படுத்தி தாலி அணிந்து திருமணம் செய்து கொண்டாராம். பிறகு மீண்டும் அந்த சிறுமியை வீட்டில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்தாராம்.

இதற்கு உடந்தையாக கார்த்திகேயன் (21), ராசு (53), துரைராஜ் (56), சந்திரகுமார் (32), மாணிக்கம் மற்றும் யுவபிரகாஷ் பெற் றோரும் உடந்தையாக இருந்தார் களாம்.

இது குறித்து சூரம்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. இது பற்றிய வழக்கு ஈரோடு மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது.

இந்த வழக்கில்இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் வாலிபர் யுவபிரகாசுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. மேலும் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. கார்த்திகேயனுக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. சந்திரகுமாருக்கும் 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.

மேலும் ராசு, துரைராஜ், மாணிக்கம், பரமசிவம், நிர்மலா தேவி என 5 பேருக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனையும் விதித்து நீதிபதி திருநாவுக்கரசு தீர்ப்பு கூறினார்.

இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட யுவராஜ் என்பவர் விடுதலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் அரசு தரப்பு வக்கீலாக சுமதி ஆஜரானார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கேரள மாணவி கொடூர கொலை: குற்றவாளிகளை படம் வரைந்து தேடும் போலீசார்..!!
Next post விழுப்புரம் அருகே நள்ளிரவில் நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார்: ரெயில்வே ஊழியர் உட்பட 2 பேர் உயிர் தப்பினர்…!!