விழுப்புரம் அருகே நள்ளிரவில் நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார்: ரெயில்வே ஊழியர் உட்பட 2 பேர் உயிர் தப்பினர்…!!
திருச்சி ரெயில்வே காலனி குடியிருப்பை சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது 46) ரெயில்வே ஊழியர். இவரும் இவரது நண்பரும் காரில் புதுவை வந்தனர்.
இரவு 1 மணிக்கு அவர்கள் அங்கிருந்து காரில் திருச்சி புறப்பட்டனர். காரை ஜெயராஜ் ஓட்டினார். விழுப்புரம் அருகே கோலியனூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே வந்தபோது காரின் பின்பகுதியில் இருந்து திடீரென்று புகை கிளம்பியது.
அதைத்தொடர்ந்து காரில் தீப்பற்றியது. உடனே ஜெயராஜூம் அவரது நண்பரும் காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கி உயிர்தப்பினர். கார் முழுவதும் தீப்பற்றி எரிந்தது.
இதுகுறித்து விழுப்புரம் தீயணைக்கும் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். தீ விபத்தில் கார் முழுவதுமாக எரிந்து நாசமானது. காரின் மதிப்பு ரூ.3 லட்சமாகும்.
இதுகுறித்து வளவனூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.
காரில் தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்று விசாரணை நடத்தி வருகிறார்கள். நள்ளிரவில் நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Average Rating