காணாமல் போன நபர் சடலமாக கண்டுபிடிப்பு: அதிர்ச்சியில் பொலிசார்…!!
சுவிட்சர்லாந்து நாட்டில் காணாமல் போன நபர் ஒருவர் ஏரியில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பொலிசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சுவிஸின் ஆர்கவ் மாகாணத்தை சேர்ந்த இஸ்மாயில் என்ற 53 வயதான நபர் ஒருவர் கடந்த ஏப்ரம் 20-ம் திகதி காணாமல் போயுள்ளார்.நபரை தேடி தோல்வியுற்ற உறவினர்கள் பொலிசாரிடம் புகார் அளித்தனர்.
ஆனால், கடந்த 3 வாரங்களாக நபரை தேடியும் எந்த தகவலும் பொலிசாருக்கு கிடைக்கவில்லை.இந்நிலையில், Rheinfelden என்ற பகுதி வழியாக செல்லும் ரைன் ஏரிக்கரையில் சடலம் ஒன்று கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
தகவல் பெற்ற பொலிசார் தடவியல் நிபுணர்களை அழைத்துக்கொண்டு அங்கு சென்றுள்ளனர்.கரையில் கிடந்த சடலத்தை மீட்டு உடனடியாக ஆய்வு செய்தபோது, அவர் காணாமல் போன இஸ்மாயில் தான் என தெரியந்துள்ளது.
கண்டுபிடிக்கப்பட்ட சடலம் தொடர்பாக அவரது உறவினர்களுக்கு பொலிசார் தகவல் அளித்துள்ளனர்.பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் இது கொலையா அல்லது தற்கொலையா என விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating