ஈராக்கில் கார்குண்டு வெடிப்பில் சிக்கி 18 பேர் பலி…!!

Read Time:1 Minute, 25 Second

201605111445056558_Car-bombing-in-Baghdad-commercial-area-kills-18-people_SECVPFஈராக் தலைநகர் பாக்தாத் அருகே இன்று தீவிரவாதிகள் நடத்திய கார்குண்டு தாக்குதலில் சிக்கிய 18 பேர் உடல் சிதைந்து பலியாகினர்.

ஈராக் தலைநகரான பாக்தாத்தின் கிழக்கேயுள்ள சத்ர் நகரத்தில் இருக்கும் மார்க்கெட் பகுதியில் இன்று மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்தபோது நிகழ்ந்த கார்குண்டு வெடிப்பில் சிக்கிய 18 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதைந்து உயிரிழந்தனர். 45-க்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்தனர்.

ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றுவரும் இவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது, இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்றுக் கொள்ளவில்லை. எனினும், இந்த தாக்குதல் பாணியை வைத்துப் பார்க்கையில் இதன் பின்னணியில் ஐ.எஸ். தீவிரவாதிகள் உள்ளதாக அந்நாட்டின் பாதுகாப்பு படையினர் கருதுகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தூக்கம் இல்லைனு துக்கப்படறீங்களா? இதையெல்லாம் ட்ரை பண்ணி நிம்மதியா தூங்குங்க…!!
Next post குடிநீரை சுத்திகரிக்கும் இயற்கை பியூரிபையர்கள்…!!