லண்டனில் பெய்த பேய் மழையால் ஏற்பட்ட வெள்ளம்: ஸ்தம்பித்த போக்குவரத்து…!!

Read Time:1 Minute, 43 Second

625.117.560.350.160.300.053.800.210.160.70 (1)லண்டனில் பெய்த பேய் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தால், சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு சில சாலை விபத்துகளும் ஏற்பட்டுள்ளன.

லண்டன் மற்றும் தென் கிழக்கு லண்டன் பகுதியில், நேற்றிரவு முதல் இன்று காலை வரை விடாமல் பெய்த தொடர் மழையால் சாலைகள் பயணிக்க முடியாத அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளன.

ரயில் சேவைகள் தடை செய்யப்பட்டதால் தலைநகர் செல்ல முயன்ற மக்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.தற்போது மழை மேற்கு நோக்கி நகர்வதால் Gloucestershire and South Wales பகுதியிலும் சாலைகள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த பேய் மழையாலும், வெள்ளத்தாலும் லண்டனின் சில பகுதிகள் தற்போது மூடப்பட்டுள்ளன. வானிலை மையம் விடுத்துள்ள மஞ்சள் எச்சரிக்கையில், 24 மணி நேரத்தில் தெற்கு கடற்கரை பகுதியில் 25 மி.மீ மழை பெய்யும் என எச்சரித்துள்ளது.

இந்த பலத்த மழையால் லண்டனின் தென் கிழக்கில் உள்ள Lewisham-ல் உள்ள A20 என்ற சாலை மூடப்பட்டுள்ளது.

எனவே, Lewisham பகுதியில் உள்ள சாலைகள் மழை வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளதால், வாகனங்கள் செல்ல முடியாது என லண்டன் போக்குவரத்து எச்சரிக்கை விடுத்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சவுதியில் நபர் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்…!!
Next post புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நான்! சிறுமியின் உருக்கமான கடிதம்…!!