பஸ் – கண்டைனர் மோதல்: 16 பேர் காயம்…!!
Read Time:48 Second
இறக்குவானை – கவுடுவாவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 16 பேர் காயமடைந்துள்ளனர்.
இன்று அதிகாலை பஸ் ஒன்று கண்டையினருடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் பஸ் மற்றும் கண்டைனர் சாரதிகள் உட்பட 16 பேர் காயமடைந்துள்ளனர்.
இவர்களை கஹவத்தை மற்றும் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை இறக்குவானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating