ஊழலுக்கு எதிரான மாநாட்டில் இன்று உரையாற்றும் ஜனாதிபதி…!!

Read Time:1 Minute, 42 Second

1751573654Untitled-1ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டனில் இடம்பெறும் ஊழலுக்கு எதிரான சர்வதேச மாநாட்டில் உரையாற்றவுள்ளார்.

இந்த உரை இலங்கை நேரப்படி சுமார் 02.30 அளவில் இடம்பெறவுள்ளதோடு, இதனை அத தெரணவின் 24×7 செய்தி அலைவரிசையில் நேரடியாகக் காணலாம்.

பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன் தலைமையில் பல்வேறு நாடுகளின் அரச தலைவர்களும் பிரதிநிதிகளும் பங்குபற்றும் ஊழலுக்கு எதிரான சர்வதேச மாநாடு இன்று (12) லண்டன் நகரில் இடம்பெறுகின்றது.

இதில் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன் நிமித்தம், ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் நேற்று (11) காலை பண்டாரநாயக்க சர்வதே விமான நிலையத்திலிருந்து லண்டன் நோக்கி பயணமாகினர்.

கடந்த ஜனவரி மாதம் மோல்டாவில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டில் பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன் விடுத்த அழைப்பையேற்றே ஜனாதிபதி இம் மநாட்டில் கலந்து கொள்கிறார்.

இந்த விஜயத்தின்போது மைத்திரிபால சிறிசேன, டேவிட் கெமரூனுடன் இருதரப்பு பேச்சுவர்த்தைகளையும் மேற்கொள்ளவுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பஷில் ராஜபக்ஷ கைது…!!
Next post பெண்களை மூடவுட் ஆக்கும் ஆண்களின் செயல்கள்…!!