போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வாலிபர் தீக்குளிக்க முயற்சி…!!
Read Time:1 Minute, 23 Second
சென்னை வேப்பேரி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வாலிபர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை வேப்பேரி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கண்ணகி நகரை சேர்ந்த சுதாகர் (30) என்ற வாலிபர் இன்று காலை தீக்குளிக்க முயன்றார். மண்எண்ணெய் கேனுடன் வந்த அவரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் வேப்பேரி போலீசார் விரைந்து வந்து அவரை அழைத்து சென்றனர்.
போலீஸ் விசாரணையில் சுதாகர் சொந்தமாக கால்டாக்சி வைத்திருப்பது தெரிய வந்தது. அவரிடம் பணியாற்றிய டிரைவர் விபத்தில் சிக்கியது தொடர்பாக கண்ணகி நகர் போலீசார் சுதாகரை அழைத்து சென்று விசாரித்தனர். அப்போது போலீசார் அடித்து உதைத்தாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர் சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி தீக்குளிப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.
Average Rating