பெருங்குடியில் பெண் அடித்து கொலை: ஏரியில் உடல் வீச்சு…!!

Read Time:1 Minute, 18 Second

201605121450075386_perungudi-lake-woman-dead-body-police-investigation_SECVPFபெருங்குடி ஏரியில் 50 வயது மதிக்கத்தக்க பெண் இறந்து கிடந்தார், போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெருங்குடி ஏரி பகுதியில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் இறந்து கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் துரைப்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். பிணமாக கிடந்தவரின் தலை, கை, காலில் ரத்த காயம் இருந்தது.

எனவே, மர்மநபர்கள் அவரை அடித்து கொலை செய்து ஏரியில் வீசி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்று தெரியவில்லை.

இது தொடர்பாக பெருங்குடி மற்றும் சுற்றுப்புற பகுதியில் மாயமானவர்கள் பட்டியலை போலீசார் சேகரித்து வருகிறார்கள். கொலையுண்டவரை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வாலிபர் தீக்குளிக்க முயற்சி…!!
Next post மேடையில் மயங்கி வீழ்ந்த போதிலும் தொடர்ந்தும் அழகுராணி போட்டியில் பங்குபற்றிய யுவதி..!!