மேடையில் மயங்கி வீழ்ந்த போதிலும் தொடர்ந்தும் அழகுராணி போட்டியில் பங்குபற்றிய யுவதி..!!

Read Time:3 Minute, 6 Second

1660061அமெரிக்காவைச் சேர்ந்த யுவதியொருவர் அழகுராணி போட்டி மேடையில் நடந்து சென்றபோது மயங்கி வீழ்ந்த போதிலும் பின்னர் அவர் எழுந்து வந்து தொடர்ந்தும் அப் போட்டியில் பங்குபற்றினார்.

ஹன்னா என்ஜ் எனும் இந்த யுவதி மினசோட்டா மாநிலத்தின் இன்டர்நெஷனல் மிஸ் டீன் மினசோட்டா அழகுராணி போட்டியில் பங்குபற்றினார்.

கடந்த வார இறுதியில் கேள்வி – பதில் சுற்றுக்காக போட்டியாளர்கள் ஒவ்வொருவராக மேடைக்கு அழைக்கப்பட்டனர்.

ஹன்னாவின் பெயர் குறிப்பிடப்பட்டவுடன் அவர் மேடையில் நடந்து வந்தார்.

மூளைச் சத்திரசிகிச்சை தொடர்பான லாப நோக்கற்ற அமைப் பொன்று குறித்து அவர் பேசிக்கொண்டிருந்தார்.

அவ்வேளையில், திடீரென ஹன்னாவின் பேச்சில் மாற்றம் ஏற்பட்டது. அதன்பின் திடீரென அவர் மயங்கி தரையில் வீழ்ந்தார்.

தடார் என சத்தத்துடன் அவர் வீழ்ந்ததைக் கண்ட பார்வையாளர்கள் திகைத்தனர்.

கடந்த வருடம் அழகுராணியாக தெரிவுசெய்யப்பட்ட யுவதியும் அவ்வேளையில் மேடையில் இருந்தநிலையில், அவர் உடனடியாக ஹன்னாவின் உதவிக்கு விரைந்தார்.

ஹன்னாவின் தாயார், போட்டி ஏற்பாட்டுக் குழு அதிகாரிகளும் அங்கு விரைந் தனர்.

அழகுராணி போட்டி மேடை யின் திரை மூடப்பட்டது.

சிறிது நேரத்தின் பின்னர், ஹன்னா மயக்கம் தெளிந்து எழுந்தார்.

வைத்தியசாலைக்குச் செல் லுமாறு பலரும் அவரை அறிவுறுத்தினர். எனினும் அவர் போட்டியிலிருந்து ஒதுங்கிவிட எண்ண வில்லை.

மீண்டும் அவர் மேற்படி நேர்காணல் சுற்றில் பங்குபற்றி கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

தான் 12 வயதிலிருந்து வலிப்புத் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டி ருந்ததாகவும் இரு தடவைகள் இவ்வாறு மயங்கி வீழ்ந்ததாகவும் மேடையில் அவர் விளக்கினார். பல வருடங்களாக நான் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன்.

என்னைப் போன்று பாதிக்கப்பட்ட ஆனால், பேச முடியாதவர் களுக்காக பேசுவதற்கு நான் விரும்புகிறேன்’ என அவர் கூறினார்.

ஹன்னாவின் துணிச்சல் மற்றும் சமூக அக்கறைக்காக பலரும் அவரைப் பாராட்டியுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெருங்குடியில் பெண் அடித்து கொலை: ஏரியில் உடல் வீச்சு…!!
Next post கிரேன் மூலம் தூக்கி நிறுத்தப்பட்ட யானை..!!