72 வயதில் முதல் தடவையாக குழந்தை பெற்ற பெண்…!!
இந்தியாவைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது 72 ஆவது வயதில் குழந்தை பெற்றுள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் நகரைச் சேர்ந்த தெல்ஜிந்தர் கவ்ர் எனும் இப் பெண்ணுக்கு கடந்த மாதம் ஆண் குழந்தையொன்று பிறந்தது. இவருக்கு இதுவே முதல் குழந்தையாகும்.
தல்ஜிந்தர் கவ்ரின் கணவரான மொஹிந்தர் சிங் கில் 79 வயதானவர். இவர்கள் 47 வருடங்களாக தம்பதிகளாக வாழ்கின்றனர்.
இத் தம்பதியினர் தமக்கு குழந்தை எதுவும் இல்லாதமை குறித்து கவலை கொண்டிருந்தனர்.
எனினும் அண்மையிலேயே இவர்கள் செயற்கை முறையிலான கருத்தரிப்பு சிகிச்சைகளை பெற்றுக்கொள்ளத் தீர்மானித்தனராம்.
“எனக்கு குழந்தை எதுவும் இல்லை என்பது எனது நீண்ட கால கவலையாக இருந்தது.
தற்போது நான் மிக மகிழ்ச்சியடைந்துள்ளேன்” என விவசாயியான மொஹிந்தர் சிங் கூறியுள்ளார்.
ஹரியானா மாநிலத்தின் ஹிசார் நகரிலுள்ள வைத்தியசாலை யொன்றிற்கு இச் சிகிச்சைகளுக்காக 2013 ஆம் ஆண்டிலிருந்து இத் தம்பதியினர் சென்று வந்தனராம்.
இத் தம்பதிக்கு சிகிச்சையளித்த மருத்துவர் அனுராக் பிஷ்னோய் இதுதொடர்பாக கூறுகையில், இப் பெண் மிகப் பலவீனமானவராக தென்பட்டதால் இச் சிகிச்சையை தவிர்ப்பதற்கே நான் முதலில் எண்ணினேன்.
எனினும், அவரின் மருத்துவ அறிக்கைகள் மூலம் அவர் கருத்தரிக்கக் கூடிய அளவு ஆரோக்கியமாக உள்ளார் என்பது தெரியவந்தது” எனத் தெரிவித்துள்ளார்.
இதே வைத்தியசாலையில் 2006 ஆம் ஆண்டில் 70 வயதான ரஜோ தேவி எனும் பெண் குழந்தையொன்றை பிரசவித்தார்.
அப்போது அவர் உலகில் மிக அதிக வயதில் குழந்தை பெற்ற பெண்ணாக விளங்கினார்.
Average Rating