பஸ் விபத்தில் 19 பேர் காயம் – ஒருவர் கவலைக்கிடம்..!!
Read Time:1 Minute, 8 Second
களுத்துறை – நாகஸ் சந்தியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 19 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்களுள் 5 பெண்களும் அடங்குவதாக களுத்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், இவர்களுள் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
லுனுகம்வெகரயிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பஸ்ஸானது வேகக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும், இதனைத் தொடர்ந்து பஸ்ஸின் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Average Rating