வங்காளதேசத்தில் மின்னல் தாக்கி 29 பேர் உயிரிழப்பு: மேற்குவங்களில் இருவர் பலி..!!

Read Time:1 Minute, 45 Second

timthumb (1)சிரஜ்காஞ்ச் பகுதியில் இருந்து 5 பேரும், பாப்னா, கிஷோர்காஞ்ச், பிரக்மன்பர்கியா ஆகிய பகுதிகளில் தலா 4 பேரும் பலியாகியுள்ளனர். ராஜ்ஷாகி பகுதியில் 2 பேரும், காஜிபூர், போக்ரா மற்றும் நாட்டோர் ஆகிய பகுதிகளில் தலா இரண்டு பேரும் உயிரிழந்துள்ளனர்.

வங்கதேச நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மின்னலின் தாக்கம் காணப்பட்டது. இதில் மின்னல் தாக்கியதில் 29 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்.

டாக்காவின் ஜாட்ரபரி பகுதியில் இரண்டு குழந்தைகள் மின்னல் தாக்கியதில் பலியானார்கள். குழந்தைகள் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த போது இந்த விபரீதம் ஏற்பட்டது.

மேலும், மின்னல் தாக்கியதில் காயமடைந்த மூன்று சிறுவர்களுக்கு டாக்கா மருத்துவ கல்லூரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் தங்களது வயல்களில் விவசாய வேலைகளை செய்து கொண்டிருந்தனர்.

இந்த மின்னலின் தாக்கம் இந்தியாவின் மேற்குவங்க மாநிலத்திலும் காணப்பட்டது. தினஜ்பூர் மாவட்டத்தின் ராய்காஞ்ச் பகுதியில் மின்னல் தாக்கியதில் ஒரு பெண் உட்பட இரண்டு பேர் உயிரிழந்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பஸ் விபத்தில் 19 பேர் காயம் – ஒருவர் கவலைக்கிடம்..!!
Next post ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று இந்தியா விஜயம்..!!