உலகின் மிகவயதான பாட்டி அமெரிக்காவில் காலமானார்..!!
அமெரிக்காவின் அலாபமா மாநிலத்தில் 1899-ம் ஆண்டு பிறந்த சூசன்னா முஷாத் ஜோன்ஸ் என்பவரை உலகின் மிகவயதான பாட்டி என்று கின்னஸ் நிறுவனம் அங்கீகரித்திருந்தது.
1922-ம் ஆண்டுவாக்கில் நியூ ஜெர்சி மற்றும் நியூயார்க் மாநிலங்களில் குடியேறிய சூசன்னா, குழந்தைகள் பராமரிப்பு மையங்களில் பணியாற்றி கடந்த 1965-ம் ஆண்டு ஓய்வு பெற்றார்.
தனது ஆயுள் ரகசியம் தொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்கு முன்னர் பதிலளித்திருந்த அவர், தனக்கு மது மற்றும் புகை பிடிக்கும் பழக்கம் இல்லை என தெரிவித்திருந்தார். நீண்டநேரம் உறங்கும் பழக்கமும் தனது ஆயுள்நீட்சிக்கு ஒருகாரணமாக இருக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், நியூயார்க் நகரில் உள்ள புருக்ளின் பகுதியில் வாழ்ந்துவந்த சூசன்னா நேற்று காலமானார் என அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, இத்தாலி நாட்டை சேர்ந்த எம்மா மோரனோ மார்ட்டினுஸி(116) என்பவர் தற்போது உலகின் மிகவயதான பாட்டியாக அறியப்படுகிறார்.
Average Rating