சூடு வைக்கப்பட்ட சிறுமி உறவினர்களிடம் ஒப்படைப்பு..!!

Read Time:2 Minute, 24 Second

imagesகாத்தான்குடியில் வளர்ப்புத் தாயினால் சூடு வைக்கப்பட்ட சிறுமி, இரண்டு மாத காலமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

குறித்த சிறுமி குணமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைத்து சிறுமியின் தாயின் குடும்பத்தினரிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

கடந்த 11.3.2015 அன்று சிறுமியின் வளர்ப்புத் தாயினால் சூடு வைக்கப்பட்ட நிலையில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் 13.3.2015 அன்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளார்.

மேலும் தொடர்ந்து இரண்டு மாதங்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி நேற்று வெள்ளிக்கிழமை சிகிச்சையின் பின்னர் சிறுமியின் தாயின் குடும்ப உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்.

காத்தான்குடி ஆறாம் குறிச்சி அப்துல் ஜவாத் ஆலீம் வீதியைச் சேர்ந்த சிறுமிக்கு சூடு வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சிறுமியின் வளர்ப்புத் தாய் மும்தாஜ் மற்றும் சிறுமியின் தந்தை மௌலவி மஜீத் ரப்பாணி ஆகிய இருவரும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

எதிர்வரும் 20.5.2016 வரை இவர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளன.

குறித்த சிறுமிக்கு மேலதிகமாக பிளாஸ்ரிக் சத்திர சிகிச்சை செய்ய வேண்டி உள்ளதால் சிறுமியை கொழும்பு களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கவுள்ளதாக சிறுமியின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மலேசிய விமான விபத்தில் 3 குழந்தைகளை இழந்த தம்பதிக்கு மீண்டும் குழந்தை பிறந்தது..!!
Next post சாய்ந்தமருதில் இடம்பெற்ற வெடிச்சம்பவத்தில் தம்பதியினர் காயம்..!!