தனியார் அலுவலகத்தில் ஏ.சி. வெடித்து தீ விபத்து: 5 பேர் பலி – 3 பேர் படுகாயம்..!!
உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத், தனியார் அலுவலகத்தில் உள்ள ஏ.சி. வெடித்ததால் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உடல் கருகி பலியாகினர்.
உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தின் ராஜ் நகர் பகுதியில் குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் இந்தியா மார்ட் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இரண்டாவது மாடியில் உள்ள இந்த அலுவலகத்தில் இன்று காலையில் ஊழியர்கள் வழக்கம்போல் வேலை செய்துகொண்டிருந்தனர். அப்போது ஏ.சி. திடீரென வெடித்து தீப்பிடித்தது.
இந்த தீ அந்த தளத்தில் உள்ள அனைத்து அலுவலகங்களுக்கும் பரவியதுடன், மூன்றாவது தளத்திற்கும் பரவி பற்றி எரிந்தது. சுற்றி தீ எரிந்ததுடன் புகை மூட்டமும் இருந்ததால் ஊழியர்கள் உள்ளே சிக்கிக்கொண்டனர்.
தகவல் அறிந்த தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கடுமையாகப் போராடி தீயை கட்டுப்படுத்தினர். பின்னர், அலுவலகத்திற்குள் காயமடைந்து மயங்கி கிடந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர்களில் 5 பேர் இறந்துவிட்டனர். 3 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். மீட்பு பணியின்போது தீயணைப்பு அதிகாரி மற்றும் இரண்டு வீரர்களும் மயங்கி விழுந்தனர்.
மின்கசிவு காரணமாக ஏ.சி. வெடித்து தீவிபத்து ஏற்பட்டிருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் பற்றி விசாரணை நடத்த கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
Average Rating